sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

/

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு


ADDED : செப் 06, 2025 12:19 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, :ஆர்.ஏ.புரத்தில், நடைபாதையை தடுப்பு வைத்து மறைத்ததுடன், தார் சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் அடுக்கி வைத்துள்ளதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டு, ஆர்.ஏ.புரம், சி.பி.ராமசாமி சாலை, எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அடையாறில் இருந்து, மந்தைவெளி, அண்ணா சாலை நோக்கி செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆர்.ஏ.புரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், பல நேரங்களில் சி.பி.ராமசாமி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.

ஏற்கனவே, சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. இதை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்கள், அடிக்கடி நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இந்த சாலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு நுாலகம் இருந்தது. இந்த நுாலகம் மிகவும் சேதமடைந்து இருந்ததால், இதை இடித்துவிட்டு புதிய நுாலகம் கட்ட முடிவு செய்து, சி.எம்.டி.ஏ., நிதியில் இருந்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, நடை பாதையை ஆக்கிரமித்து, தடுப்பு வைத்து மறைத்துள்ளதால், பாதசாரிகள் சாலையில் இறங்கி வாகனங்களுக்கு இடையே, ஆபத்தான நிலையில் நடக்க வேண்டி உள்ளது.

அதோடு, கட்டுமான பொருட்களை சாலை யோரம் ஆக்கிரமித்து அடுக்கி வைத்துள்ளனர்.

இத்தகைய சாலை ஆக்கிரமிப்பால், அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் ஒரே திசையில் செல்லும் இடத்தில், ஒரு வாகனம் தான் செல்ல முடிகிறது.

இதனால், நடந்து செல்வோருக்கு வழி இல்லாமல், வாகனங்கள் செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, நடை பாதையை ஆக்கிரமித்து, மறைத்து வைத்துள்ள தடுப்பு மற்றும் கட்டுமான பொருட்களை அகற்றி, வழி ஏற்படுத்த வேண்டும் என, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us