ADDED : அக் 29, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலைய வளாகம் முழுதும், வண்ண விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில், விமான நிலைய சர்வதேச டெர்மினல் புறப்பாடு தளத்தில், திண்டிவனம் அருகே மரக்காணத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் செல்வம், 26, என்பவர், அலங்கார பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். அப்போது, திடீரென 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ஏர்போர்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயரமான இடத்தில் வேலை செய்யும்போது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஒப்பந்த நிறுவனம் செல்வத்தை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.