/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது
/
அலுமினிய தகடுகளை திருடிய ஒப்பந்த ஊழியர்கள் கைது
ADDED : பிப் 04, 2026 05:34 AM
சென்னை: தனியார் நிறுவனத்தில் துாய்மை பணிக்காக வைத்திருந்த அலுமினிய தகடுகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன், 27. இவர் மயிலாப்பூர் காரணீஸ்வர் பக்கோடா தெருவில் உள்ள 'உர்பேசர்' நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் பணியில் இருந்தபோது, ஒப்பந்த ஊழியர்களான மண்ணடியைச் சேர்ந்த வசந்தகுமார், 24, புதுப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 22, ஆகியோர் ஓட்டிச் சென்ற வாகனத்தை ஆய்வு செய்தார். அதில் துாய்மை பணிக்காக வைத்திருந்த அலுமினிய தகடுகளை பேட்டரி வாகனத்தில் மறைத்து வைத்து இருவரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த மெரினா போலீசார், திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60,000 ரூபாய் மதிப்பிலான, 19 அலுமினிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

