sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்

/

பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்

பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்

பால சன்னியாசி மடத்தின் மண்டபம் தொடர்பாக மோதல்


ADDED : பிப் 04, 2024 06:42 AM

Google News

ADDED : பிப் 04, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ' சென்னை மயிலாப்பூர், கபாலித்தோட்டம் பகுதியில் ஸ்ரீமத் பால சன்னியாசி மடம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலர் ஆறுமுகம், 50, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் பால சன்னியாசி மடத்தின் வன்னியர் திருமண மண்டபம் உள்ளது.

கடந்த 30ம் தேதி, மண்டபத்தை அபகரிக்கும் நோக்கில், ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. அங்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வைத்திருந்த சொத்து ஆவணங்களை எடுத்து சென்றனர். அங்கு இருந்த வாதாபி விநாயகர் சிலையையும் சேதப்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

ஆனால், திருமண மண்டபத்தில் ஆவணங்களை எடுத்து சென்றவர்களும் ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளனர். அதன் படி, வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:

வன்னியர் சொத்து வாரியத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, ரவுடிகளுடன் வந்து திருமண மண்டபத்துக்குள் புகுந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக எங்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us