sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விபத்து சாலைகள் குறித்த விபரம் தர போலீசாருக்கு மாநகராட்சி அழைப்பு

/

விபத்து சாலைகள் குறித்த விபரம் தர போலீசாருக்கு மாநகராட்சி அழைப்பு

விபத்து சாலைகள் குறித்த விபரம் தர போலீசாருக்கு மாநகராட்சி அழைப்பு

விபத்து சாலைகள் குறித்த விபரம் தர போலீசாருக்கு மாநகராட்சி அழைப்பு


ADDED : மே 31, 2025 03:16 AM

Google News

ADDED : மே 31, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சென்னையில் வேகத்தடை தேவைப்படும் சாலைகள், சீரமைக்க வேண்டிய சாலைகள் குறித்த பட்டியலை, போலீசார் விரைந்து வழங்கலாம்' என, மாநகராட்சியும் அழைப்பு விடுத்துள்ளது.

'விபத்து ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசமான சாலைகளை சீரமைக்கக் கோரி, மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கடிதம் எழுத வேண்டும் என, போக்குவரத்து போலீசாருக்கு, போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.

இது தொடர்பாக, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் பல்வேறு கட்ட வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு ஏற்ப, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பகுதிகளில், சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படுகின்றன.

அதேநேரம், அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளில், சாலையில் வேகத்தடை வேண்டும் என்றாலும், பள்ளங்கள் இருந்தாலும், மாநகராட்சிக்கு போலீசார் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பணிகளும் நடந்து வருகின்றன.

போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி, பாதிப்புள்ள சாலைகள் குறித்து, மாநகராட்சிக்கு போலீசார் தெரிவிக்கலாம். வார்டு உதவி பொறியாளர், மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம்; கடிதமாகவும் அளிக்கலாம்.

வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதால், போலீசார் விரைந்து விபரங்களை தரலாம். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமையகத்தில் புகார் தரலாம்; அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us