sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கவுன்சிலர் மிரட்டுவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார்

/

கவுன்சிலர் மிரட்டுவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார்

கவுன்சிலர் மிரட்டுவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார்

கவுன்சிலர் மிரட்டுவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார்


ADDED : மார் 30, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சியில், சாலையில் திரியும் மாடுகளை பிடிப்போரை, கவுன்சிலர் சாரதா மிரட்டுவதாக, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அனைத்துத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாநகராட்சி கமிஷனருக்கு தரப்பட்ட புகார் விபரம்:

திரு.வி.க.நகர் மண்டலம், 65வது வார்டில் கடந்த 19ம் தேதி, மூன்று மாடுகள் பிடிக்கப்பட்டு, தொழுவத்தில் அடைக்கப்பட்டன.

அந்த மாடுகளுக்கான அபராதத் தொகையை செலுத்திய பின், அவற்றின் உரிமையாளர், மீட்டு சென்றார். சில தினங்களில், அதில் ஒரு மாடு இறந்துவிட்டது.

மாடு இறந்ததற்கு மாடுபிடி ஊழியர்கள் தான் காரணம் எனக்கூறி 65வது வார்டு கவுன்சிலர் சாரதா, மாடுபிடி ஊழியர்களை மிரட்டி வருகிறார்.

மாடு பிடிக்கும் போது மாடு நோய்வாய்பட்டிருந்தால் மருத்துவ அதிகாரியின் அறிவுரைப்படி மாட்டை விடுவிப்பர். ஆனால், மாடு இறந்தததற்கு ஊழியர்கள் தான் காரணம் எனக்கூறி கவுன்சிலர் மிரட்டுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us