sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தவறான தகவல் தந்த மாநகராட்சி மாநில தகவல் ஆணையம் 'குட்டு'

/

தவறான தகவல் தந்த மாநகராட்சி மாநில தகவல் ஆணையம் 'குட்டு'

தவறான தகவல் தந்த மாநகராட்சி மாநில தகவல் ஆணையம் 'குட்டு'

தவறான தகவல் தந்த மாநகராட்சி மாநில தகவல் ஆணையம் 'குட்டு'


ADDED : அக் 09, 2025 02:13 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து மனுதாரர் கோரிய தகவல்களுக்கு, தவறான தகவல்களை அளித்த சென்னை மாநகராட்சியை, மாநில தகவல் ஆணையம் கண்டித்துள்ளது.

சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புகழ்பாலன். இவரது பாட்டி அமிர்தம்மாள் வீட்டை, போலி ஆவணங்கள் வாயிலாக, வாடகைதாரர் அபகரித்து கொண்டதோடு, சொத்து வரியிலும் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, 2023ம் ஆண்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியிடம், புகழ்பாலன் விளக்கம் கேட்டிருந்தார்.

மனு மீதான தினசரி முன்னேற்ற அறிக்கை மற்றும் ஆவண நகல்கள் உள்ளிட்ட 12 தகவல்களை கோரியிருந்தார். தகவல் கிடைக்காததால் மேல் முறையீடு செய்தார்.

இம்மனு மீதான விசாரணையில், மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:

ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலித்ததில், மனுதாரரின் மனுவிற்கும், முதல் மேல்முறையீட்டு மனுவிற்கும், சென்னை மாநகராட்சி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பது தெரிகிறது.

எனவே, அப்போதைய ஐந்தாவது மண்டலம் பொதுத் தகவல் அலுவலரும், தற்போதைய கோடம்பாக்கம் மண்டல வருவாய் பிரிவு அதிகாரியுமான பிரகாஷ்; அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும், தற்போதைய துாத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளருமான தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை, 15 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.

இருவரிடமும், தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் விளக்கம் கேட்டு, வரும் 6ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு இனவாரியான பதில்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரரோ, 'தனக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை. ஆவணங்களின் நகல்கள் அளிக்கப்பட வில்லை' என்றார்.

எனவே, ராயபுரம் மண்டல செயற்பொறியாளர், மனுதாரரின் மனுவை சரியாக படித்துப்பார்த்து, சரியான திருத்திய ஆவணங்களின் அடிப்படையில், இன வாரியான தகவல்கள் மற்றும் நகல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

தகவலை மனுதாரர் பெற்றதற்கான தபால் சான்றின் நகலை, ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us