
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்: சூணாம்பேடு அடுத்த வெள்ளகொண்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45; வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், கூலி வேலை செய்து, குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், மின்கசிவு ஏற்பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் நிலைய வீரர்கள் வருவதற்குள், குடிசை எரிந்து சாம்பலானது; வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் நாசமாயின. விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.