sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கியில் கடன் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

/

வங்கியில் கடன் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

வங்கியில் கடன் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

வங்கியில் கடன் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது


ADDED : ஆக 01, 2025 12:36 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கத்தில் வசிப்பவர் அழகுபாண்டியன், 29; 'கென்ட்' நிறுவனத்தின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர வினியோகஸ்தர்.

அவருக்கு, சமூக வலைதளமான முகநுால் வாயிலாக கீர்த்தனா, 30, அவரது கணவர் பிரபு இன்பதாஸ், 44, ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். தொழில் அபிவிருத்திக்காக, வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய அழகுபாண்டியன், அவர்களிடம் பல தவணையாக, 16 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்ற தம்பதி, வங்கி கடன் பெற்றுத்தரவில்லை; வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. மொபைல் போனில் அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்தனர்.

இதுகுறித்து அழகு பாண்டியன் புகாரில், கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, 16 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த, முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், அவரது மனைவி கீர்த்தனா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஐ - போன் உட்பட, மூன்று மொபைல் போன்கள், ஐ - பேட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us