sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'அஞ்சப்பர்' சாப்பாட்டில் கரப்பான் பூச்சி ரூ.12,000 இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

/

'அஞ்சப்பர்' சாப்பாட்டில் கரப்பான் பூச்சி ரூ.12,000 இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

'அஞ்சப்பர்' சாப்பாட்டில் கரப்பான் பூச்சி ரூ.12,000 இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

'அஞ்சப்பர்' சாப்பாட்டில் கரப்பான் பூச்சி ரூ.12,000 இழப்பீடு தர கோர்ட் உத்தரவு


ADDED : செப் 02, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அசைவ சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்த உணவை சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பெண்ணுக்கு, 'அஞ்சப்பர்' உணவகம், 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பை சேர்ந்தவர் வழக்கறிஞர் அபிநயா முத்து, 29. இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

கடந்தாண்டு பிப்., 22ல், 'ஸ்விக்கி ஆன்லைன் செயலி' வாயிலாக, அசைவ சாப்பாடு வாங்க பதிவு செய்தேன். அஞ்சப்பர் உணவகத்தின் நுங்கம்பாக்கம் கிளையில் இருந்து, உணவு விநியோகிகம் செய்யப்பட்டது.

அந்த உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, இறந்த நிலையில் 'கரப்பான் பூச்சி' கிடந்தது.

புகைப்பட ஆதாரத்துடன் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு, புகார் அளித்தேன். கரப்பான் பூச்சி கிடந்த உணவை சாப்பிட்டதும், சிறிது நேரத்தில், லேசான காய்ச்சல், வயிறு வலி ஏற்பட்டது.

உணவக மேலாளரிடம் அளித்த புகாருக்கு உரிய விளக்கம் இல்லை; வேறொரு உணவை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். பல முறை போனில் அழைத்தும், அழைப்பை ஏற்கவில்லை.

பின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம், 2024 மார்ச் 8ல் புகார் அளித்தேன்.

சுகாதாரமற்ற உணவை விநியோகித்து, சேவை குறைபாடுடன் நடந்த உணவகம், ஆன்லைன் நிறுவனத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 50,000 ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 15,000 ரூபாயும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உணவகம் தரப்பில், 'மனுதாரரின் புகாரில் முரண்பாடுகள் உள்ளன. சாதத்தில் கரப்பான் பூச்சி கிடந்தது என்று மனுதாரர் கூறுகிறார். அவர் அனுப்பிய புகைப்படத்தில், குழம்புடன் கலந்த உணவில், இறந்த கரப்பான் பூச்சி காணப்பட்டது.

'சாதத்தில் கரப்பான் பூச்சி காணப்பட்டால், உணவில் குழம்பு கலக்க வாய்ப்பில்லை. சுகாதாரமான முறையில் தான் உணவு சமைத்து, விநியோகம் செய்யப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவு:

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வறிக்கை மற்றும் ஆவணங்களை பரிசீலித்ததில், உணவகத்தின் உணவு விநியோக பகுதியில், பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்து உள்ளன.

எனவே, உணவகம் தரமற்ற உணவை விநியோகித்து, சேவை குறைபாடுடன் நடந்துள்ளது நிரூபணமாகியுள்ளது.

வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்விக்கி, ஆன்லைன் விநியோக நிறுவனம் மட்டுமே என்பதால், அந்த நிறுவனத்தை விடுவிக்கிறோம்.

தரமற்ற உணவை வழங்கிய அஞ்சப்பர் நிறுவனம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவாக 2,000 ரூபாயும் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us