UPDATED : ஜூன் 02, 2026 05:08 PM
ADDED : ஜூன் 02, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ராமாபுரம்: ராமாபுரம் பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 27 வயது பெண், மாடியில் காயவைத்த துணிகளை எடுக்க, கடந்த 31ம் தேதி இரவு சென்றார்.
அப்போது, அவரது பிளாஸ்டிக் வாளி உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்கிருந்த, அதே குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீசுபிக் ஷ் ஆனந்த், 25, சூர்யா, 28, ஆகியோரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு தாங்கள்தான் அதை உடைத்ததாக கூறியதோடு, இளம்பெண்ணையும் தாக்கியுள்ளனர். ராமாபுரம் போலீசார் விசாரித்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.
