sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர்

/

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : மார் 12, 2026 05:06 AM

Google News

ADDED : மார் 12, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா கத்தியுடன்சுற்றி திரிந்த இருவர் கைது

கோயம்பேடு: கோயம்பேடு 100 அடி சாலையில் இருவர் பட்டா கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டுவதாக புகார் வந்தது. அங்கு சென்ற போலீசார், மது போதையில் கத்தியுடன் திரிந்த இருவரை பிடித்தனர்.

சின்மயா நகரைச் சேர்ந்த லோடு வேன் ஓட்டுநர் வெற்றிவேல், 29, ஆன்லைன் வர்த்தக தளமான 'அமேசான்' டெலிவரி ஊழியர் சர்குணம், 32, ஆகிய இருவரையும் கைது செய்து, 2.5 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.

---

நிலம் ஆக்கிரமிப்பு

அ.தி.மு.க.,

பிரமுகர் மீது புகார்

வானகரம்: பூந்தமல்லி வட்டம் அடையாளம்பட்டு கிராமத்தில் குளம் மற்றும் நத்தம் வகைப்பாடு நிலங்கள், 2,400 சதுர அடி பரப்பளவில் உள்ளன.

இந்த இடத்தை, அ.தி.மு.க., தென் சென்னை தெற்கு, மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலராக உள்ள, வானகரம் ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், 51, என்பவர் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

தகவலறிந்த வானகரம் வருவாய் ஆய்வாளர் இளங்கோ, 35, கட்டுமான பணிகளை நிறுத்தியதோடு, ஆக்கிரமிப்பு குறித்து மகேஷ் மீது, வானகரம் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us