UPDATED : ஜூன் 27, 2026 09:07 PM
ADDED : ஜூன் 27, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
ஆவடி: திருவள்ளூர், பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 30; தனியார் நிறுவன ஊழியர். நேற்ற முன்தினம் ஆவடி செக்போஸ்ட் அருகே, தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோகன், பெங்களூரு செல்லும் காமாக்யா விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தார்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
மாங்காடு: மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சர்வான், 39, அப்பகுதியில் 35 வயது பெண் வீட்டில் குளிப்பதை, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். மாங்காடு போலீசார் சர்வானை கைது செய்து, அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
