UPDATED : ஜூலை 23, 2026 03:58 PM
ADDED : ஜூலை 23, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
வானகரம்: போரூர் அடுத்த தண்டலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்ற ராஜ்குமார், 26; ஆட்டோ ஓட்டுநர்.
இவர் மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட இவர், மே 20ல் ஜாமினில் வெளியே வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் ராஜ்குமார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர், வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த வானகரம் போலீசார், குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
