sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு

/

மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு

மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு

மகனை தாக்கியவரை தடுத்த  வி.சி., பிரமுகருக்கு வெட்டு


ADDED : நவ 04, 2024 04:14 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, வ.உ.சி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 53 ; வி.சி., கட்சி உறுப்பினர். கடந்த 29ம் தேதி, அவரது மனைவி லுார்துமேரி, மகன் ஜோதி நிரஞ்சன் இருவரும், அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, வழியில் நின்றிருந்த பிரசாந்த் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரசாந்த், அவரது நண்பர்களுடன் ஜோதி நிரஞ்சன் வீட்டிற்கு சென்று, அவரை தாக்க முயன்றபோது, லுார்து மேரி, மகனை அறையில் வைத்து கதவை பூட்டி உள்ளார். ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள், கதவு, ஜன்னலை உடைத்தனர்.

ராஜேந்திரன் தடுக்க முயன்றபோது, கத்தியால் அவரது தலையில் வெட்டி, கல்லால் தாக்கிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ராஜேந்திரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். புளியந்தோப்பைச் சேர்ந்த சரவணன், 24, ஊட்டி வாய் அபி, 25, இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். ஊட்டி வாய் அபி மீது, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள பிரசாந்த் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us