sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை

/

டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை

டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை

டி.ஐ.ஜி.,யிடம் மோசடி முயற்சி சைபர் கிரைம் விசாரணை


ADDED : நவ 24, 2024 12:20 AM

Google News

ADDED : நவ 24, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, டி.ஐ.ஜி.,யின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், பொய்யான தகவலை கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தொடர்பாக கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைமில் டி.ஐ.ஜி., விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு, கடந்த 19ம் தேதி, குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், என்னுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பார்சலை ஆமதாபாத்தில் இருந்து இலங்கைக்கு 'இன்டர்நேஷனல்' என்ற கொரியரில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 'இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என்றும், அந்த மர்ம நபர் கூறினார்.

பொய்யான தகவல் என்பதால் அழைப்பை துண்டித்துவிட்டேன். எனவே, என்னிடம் மோசடியில் ஈடுபட முயன்றவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின்படி, மர்மநபர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us