/
புகார் பெட்டி
/
சென்னை
/
மேம்பால மைய தடுப்பு உடைந்ததால் பாதிப்பு
/
மேம்பால மைய தடுப்பு உடைந்ததால் பாதிப்பு
ADDED : பிப் 19, 2026 01:13 AM

ரா யப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ஐஸ் ஹவுஸ், கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி ஆகிய முக்கிய இடங்களுக்கு செல்வோர், இந்த மேம்பாலத்தின் வழியே தான் பயணிக்கின்றனர்.
மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலம், ஓராண்டாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. பாலத்தின் நடுவில் உள்ள 'டிவைடர்' எனும் சாலை தடுப்புகள் சேதமடைந்தும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால், அவ்வழியே, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழியே பயணிப்போர், அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் எதிர்புறம் வரும் வாகனங்கள் இடித்து கொள்வதால், அவ்வப்போது சாலை விபத்தும் நடக்கிறது. சாலை தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.
--சரவணன், ராயப்பேட்டை

