ADDED : பிப் 15, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், சென்னை, எர்ணாவூர்குப்பம் கடற்கரையில் நேற்று காலை, இறந்த நிலையில் மூன்று ராட்சத ஆமைகள் கரை ஒதுங்கின.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் கடற்கரைக்கு வரும். அப்போது, துாண்டில் வளைவுகளில் மோதி ஆமைகள் உயிரிழக்க நேரிடுகிறது.
குறிப்பாக, ஜன., - பிப்., மாதங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

