sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சார பஸ்கள் இயக்க தனியார் வாயிலாக 1,250 நடத்துனர்கள் நியமிக்க முடிவு

/

மின்சார பஸ்கள் இயக்க தனியார் வாயிலாக 1,250 நடத்துனர்கள் நியமிக்க முடிவு

மின்சார பஸ்கள் இயக்க தனியார் வாயிலாக 1,250 நடத்துனர்கள் நியமிக்க முடிவு

மின்சார பஸ்கள் இயக்க தனியார் வாயிலாக 1,250 நடத்துனர்கள் நியமிக்க முடிவு


ADDED : ஏப் 19, 2025 12:34 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மாநகர போக்குவரத்து கழகம், தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க, 'அசோக் லைலாண்டு' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மின்சார பேருந்துகளின் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான, பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் முதற்கட்டமாக, வியாசர்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையார்பேட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த பேருந்துகளை இயக்க தினமும் 1,250 நடத்துனர்கள் தேவை. ஒப்பந்த அடிப்படையில், நடத்துனர்களை வழங்கும் வகையில், மனிதவள மேலாண் நிறுவனங்கள் வரும் 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வரும் மே 12ம் தேதி இறுதி நாள்.

நடத்துனர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நிறுவனம், நடத்துனர்களை கண்காணிக்க 12 மேற்பார்வையாளர்கள், கூடுதலாக 390 நடத்துனர்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us