sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்

/

 கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்

 கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்

 கொட்டும் மழையிலும் தீபத்திருவிழா கோலாகலம்


ADDED : டிச 04, 2025 01:51 AM

Google News

ADDED : டிச 04, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா, கொட்டும் மழையிலும் விமரிசையாக நடந்தது.

சென்னை, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தி தீபமேற்றப்பட்டது.

நேற்று மாலை அனைத்து வீடுகளிலும், அகல் விளக்கு ஏற்றி, அவல், பொரி, கடலை உருண்டை, அப்பம் செய்து படைத்து வழிபாடு நடத்தினர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரஹாரப் பகுதி யில் நேற்று விளக்கேற்றப் பட்டது. இன்று சொக்கப் பனை கொளுத்தி, தீப மேற்றி வழிபாடு நடக்கிறது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும் இன்று கார்த்திகை தீப விளக்கேற்றி சொக்கப் பனை கொளுத்தப் படுகிறது.

வடபழனி முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருநாளான நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

மாலை விசேஷ சந்தனகாப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து கார்த்திகை பூஜை நடந்தது.

மேலும், 27 நட்சத்திரங்கள், நான்கு கோபுரங்கள், எட்டு சன்னதிகள் என கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

-- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us