/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
/
பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
PUBLISHED ON : மார் 01, 2026 05:44 AM

பல்லாவரம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஜி.எஸ்.டி., சாலையை விரிவுபடுத்தும் வகையிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.
பல்லாவரத்தில், குரோம்பேட்டை மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில், அம்மா உணவகம் முதல் துரைப்பாக்கம் சாலை மேம்பாலம் வரை குறுகலாக உள்ளது. இதனால், அந்த இடத்தில், நாள்தோறும் 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வாக, அந்த இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சாலை விரிவாக்கத்திற்கு ஏதுவாக, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

