sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரமபத வாசல் டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

/

பரமபத வாசல் டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

பரமபத வாசல் டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

பரமபத வாசல் டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்


ADDED : ஜன 07, 2025 12:39 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, வைகுண்ட ஏகாதசி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான பரமபத வாசல் திறப்பு, வரும் 10ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், 2,000 பேர் வரை அனுமதிக்கப்படுவதாகவும், அறநிலையத் துறை தெரிவித்திருந்தது.

மேலும், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண, 'ஆன்லைன்' வாயிலாக, முதலில் பதிவு செய்த 500 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 1,500 பேருக்கு, 500 ரூபாய்க்கான கட்டண அனுமதி சீட்டு, நேற்று கோவிலில் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசன டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.






      Dinamalar
      Follow us