ADDED : மே 31, 2026 03:39 AM

அ நிறம் | அளவு
வேளச்சேரி: வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவிலில், பல ஆண்டுகளுக்கு பின், பிரம்மோத்சவ விழா, இம்மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த, 22ம் தேதி அதிகார நந்தி சேவையும், 26ல் தேர் திருவிழாவும் நடந்தது.
தொடர்ந்து, நேற்று மாலை தெப்ப உத்சவம் நடந்தது. தண்டீஸ்வரர் கருணாம்பிகையும் தெப்பத்தில் எருந்தருளி, அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
