ADDED : ஜன 31, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,வியாசர்பாடி மேம்பாலத்தில் நேற்று, டீசல் லாரி ஒன்று சென்றது. அப்போது திடீரென, அந்த லாரியில் இருந்து டீசல் கொட்டியது.
சாலை முழுதும் டீசல் பரவியதால், அவ்வழியாக 'பைக்'குகளில் வந்தவர்கள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கினர்.
தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே வழுக்கி விழுந்தனர்.
இதில், சிலருக்கு சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், டீசல் மீது மணலை கொட்டி, விபத்து ஏற்படுவதை தடுத்தனர்.