/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரைகுறை பணியால் கே.கே.நகரில் சிரமம்
/
அரைகுறை பணியால் கே.கே.நகரில் சிரமம்
ADDED : ஏப் 22, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.கே., நகர், சைதாப்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த குழாய், கே.கே.நகர் காமராஜர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, பி.டி., ராஜன் சாலை வழியாக, நெசப்பாக்கம் செல்கிறது.
இந்நிலையில், பேருந்துகள், வாகனங்கள் செல்லும் பி.டி., ராஜன் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி, குழாய் அமைக்கப்பட்டது.
பின், அப்பள்ளத்தை முறையாக மூடாததால், வாகனங்கள் செல்வதில், நேற்று காலை சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள், அந்த பள்ளத்தில் மண் கொட்டி சீரமைத்தனர்.