/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி - பழுதடைந்த சிக்னல் சீரமைப்பு
ADDED : ஏப் 22, 2025 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் 'ஆன்-ஸ்ட்ரீட் பார்முலா 4' கார் பந்தயத்தை, கடந்த ஆண்டு ஆக., 31, செப்., 1ம் தேதி தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் நடத்தியது.
போட்டிக்காக, புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது, அண்ணாசாலை - பல்லவன் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் விளக்குகளுக்கான வடம் சேதமானது.
இது சேதமடைந்து ஏழு மாதங்களாகியும், வடங்கள் சீரமைக்காததால், வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்திற்கு வழிவகுத்தன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, வடங்கள் சீரமைக்கப்பட்டு, சிக்னல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.