ADDED : நவ 26, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மனம் தளராத மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று காலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை அல்லது குடிசை மாற்று வாரியத்தில் இலவச வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச இ - சேவை மையம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைவர் ரமேஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், சாலையில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்த சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக மாற்றுத்திறனாளிகளிடம் கூறினார்.
பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

