sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணியில் டாக்டர் இல்லாததால் சோழிங்கநல்லுாரில் ஏமாற்றம்

/

பணியில் டாக்டர் இல்லாததால் சோழிங்கநல்லுாரில் ஏமாற்றம்

பணியில் டாக்டர் இல்லாததால் சோழிங்கநல்லுாரில் ஏமாற்றம்

பணியில் டாக்டர் இல்லாததால் சோழிங்கநல்லுாரில் ஏமாற்றம்


ADDED : மார் 31, 2025 02:50 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, நெடுஞ்செழியன் தெருவில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு, காய்ச்சல், சளி, லேசான காயம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, தினமும் 120க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு செல்கின்றனர்.

ஆனால், இங்கு ஆறு மாதமாக டாக்டர் இல்லை. இதனால், செவிலியர்கள் நோயாளிகளிடம் நோய் குறித்து விசாரித்து, மாத்திரை வழங்குகின்றனர்.

சிலருக்கு, மாத்திரை அலர்ஜியால் ஊசி மருந்து கேட்கின்றனர். டாக்டர் இல்லாததால், ஊசி மருந்து செலுத்துவதில்லை. இதனால், நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை உள்ளது.

அதே வார்டில், பொன்னியம்மன் கோவில் தெருவில், நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளது. இங்கு செவிலியர், உதவியாளர் இல்லை. இதனால், மருத்துவரை பார்த்த பின், அதிக நேரம் காத்திருந்து, அவரிடமே மருந்து வாங்க வேண்டியுள்ளது.

இரண்டு மையத்திலும் டாக்டர், செவிலியர் நியமிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us