/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்
/
மாற்றுத்திறன் குழந்தைகள் மக்களுடன் கலந்துரையாடல்
ADDED : நவ 16, 2024 12:44 AM

கோட்டூர்புரம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோட்டூர்புரம், வித்யாசாகர் மன வளர்ச்சி மாற்றுத்திறனாளி பள்ளி, நிழல் மற்றும் யங் இந்தியா ஆகிய அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சியை, 170வது வார்டு கவுன்சிலர் கதிர்முருகன் துவக்கி வைத்தார். கோட்டூர்புரத்தில் உள்ள, பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும், ஏ.பி.சி.டி., பூங்காவில், மன வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் மரக்கன்றுகள் நட்டனர்.
இதில் மன வளர்ச்சி மாற்றுத்திறனாளிகளை தயக்கமின்றி அணுகுவது, கலந்துரையாடுவது, அவர்களின் தனித்திறனை ஏற்றுக்கொள்வது, பிறரிடம் பகிர்வது குறித்து, அமைப்பினர் பேசினர். பொதுமக்களுடன், குழந்தைகளை கலந்துரையாட வைத்தனர்.
மன வளர்ச்சி குழந்தைகளுடன் கலந்துரையாடியது புதிய அனுபவத்தை கொடுத்தது என, பொதுமக்கள் கூறினர்.

