sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வளைந்து செல்லும் கால்வாய் பொழிச்சலுாரில் அதிருப்தி

/

வளைந்து செல்லும் கால்வாய் பொழிச்சலுாரில் அதிருப்தி

வளைந்து செல்லும் கால்வாய் பொழிச்சலுாரில் அதிருப்தி

வளைந்து செல்லும் கால்வாய் பொழிச்சலுாரில் அதிருப்தி


ADDED : பிப் 24, 2024 12:11 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொழிச்சலுார், பம்மல் - பொழிச்சலுார் சாலை, அதிக போக்குவரத்து உடையது. இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

முக்கிய சாலையில் கால்வாய் கட்டும்போது, சாலையோர ஆக்கிரமிப்புகளையும், இடையூறாக உள்ள மின்கம்பங்களையும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் இச்சாலையில், பல இடங்களில் வளைந்து வளைந்து, மழைநீர் கால்வாய் கட்டப்படுகிறது. சில இடங்களில், மின்கம்பங்கள் அகற்றாமல், அவற்றுக்கு இடையே கால்வாய் செல்கிறது.

இதுபோல் கட்டுவது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே அமையும். தவிர, மழைநீர் செல்லவும் தடை ஏற்படும்.

இதேபோல், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பல இடங்களில் வளைந்து வளைந்து கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்தது.

தற்போது, பம்மல் - பொழிச்சலுார் சாலையில் வளைந்து செல்லும் வகையில் கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினரின், இதுபோன்ற அஜாக்கிரதையால், தாம்பரம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள முக்கிய சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us