ADDED : மார் 09, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாபு, 56; தி.மு.க., முன்னாள் கவுன்சிலர்.
சமீபத்தில் இவர் வீட்டருகே, வடிகால் பணிக்காக நிறுத்தியிருந்த,'பொக்லைன்' வாகனத்தை எடுக்கும்படி, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் இசக்கியப்பன், 30, என்பவரிடம் தகராறு செய்தார்.
பொக்லைன் மீது அவர் கல் எறிந்ததில், கண்ணாடி உடைந்ததாக, சாத்தாங்காடு போலீசில் இசக்கியப்பன் புகார் அளித்தார். இதன்படி போலீசார், நேற்று பாபுவை கைது செய்தனர்.

