sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய கும்பல் கைது

/

பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய கும்பல் கைது

பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய கும்பல் கைது

பூனை பிடிப்பது போல் நாடகம் 20 சவரன் திருடிய கும்பல் கைது


ADDED : நவ 22, 2024 12:39 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, புதுச்சேரி கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி பொன்னியம்மாள், 45. கடந்த, 10ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று, மறுநாள் வீடு திரும்பினர்.

மர்ம நபர்கள், வீட்டின் பீரோவை உடைத்து 12 சவரன் நகை, 450 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது.

இதேபோல், ஸ்ரீராமகுப்பம், மாகரல் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் 8 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது.

இதுகுறித்த புகாரின்படி, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் தனிப்படை போலீசார், திருடர்களை தேடி வந்தனர்.

புதுச்சேரி, மாகரல், ஸ்ரீராமகுப்பம் ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகளின் ஆய்வில், மூன்று திருட்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டது தெரிந்தது.

மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு பேர், கிராமங்களுக்கு சென்று பூட்டிய வீட்டை நோட்டமிடுகின்றனர்.

பின் பூனை பிடிப்பது போல், ஆண்கள் வலை எடுத்து கொண்டு, திருட செல்லும் வீட்டின் அருகே செல்கின்றனர். பெண் ஒருவர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், நகையை திருடி செல்வது தெரிந்தது.

இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணன், 26, அஜித், 21, காளஹஸ்தியைச் சேர்ந்த சத்யராஜ், 35, அவரது மனைவி பிரமிளா, 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 சவரன் நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.






      Dinamalar
      Follow us