sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சவாரிக்கு கூடுதலாக ரூ.30 தராத பயணியை தாக்கிய ஓட்டுனர் கைது

/

சவாரிக்கு கூடுதலாக ரூ.30 தராத பயணியை தாக்கிய ஓட்டுனர் கைது

சவாரிக்கு கூடுதலாக ரூ.30 தராத பயணியை தாக்கிய ஓட்டுனர் கைது

சவாரிக்கு கூடுதலாக ரூ.30 தராத பயணியை தாக்கிய ஓட்டுனர் கைது


ADDED : அக் 18, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரம், பெரியார் சாலையைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 60. இவர், நேற்று முன்தினம், 'ஓலா' செயலியில் 'புக்' செய்து, தன் உறவினருடன் அண்ணா நகரில் இருந்து அயனாவரத்திற்கு, ஆட்டோவில் வந்துள்ளார்.

சவாரிக்கு 180 ரூபாய் காட்டியது. அதன்படி, அயனாவரம் சக்கரவர்த்தி நகரில், உறவினர் இறங்கிவிட்டார்.

அருகில் உள்ள வெள்ளாளர் தெருவில் ஜெயகுமாரை இறக்கிவிட கூடுதலாக, 20 ரூபாய் சேர்த்து 200 ரூபாய் தருவதாக பேசியுள்ளனர். அதன்படி வெள்ளாளர் தெருவில் ஜெயகுமாரை இறக்கிவிடும்போது, ஆட்டோ ஓட்டுனர் பிரதீப், 29, கூடுதலாக 30 ரூபாயுடன் 230 ரூபாய் கேட்டுள்ளார்.

இதில், வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஓட்டுனர் பிரதீப், ஜெயகுமாரை குத்தினார். இதில், அவரது இடது கண்ணில் காயமடைந்து மயங்கினார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரித்து, அண்ணா நகரைச் சேர்ந்த ஓட்டுனர் பிரதீப்பை, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us