/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதமர் வருகை 'ட்ரோன்' பறக்க தடை
/
பிரதமர் வருகை 'ட்ரோன்' பறக்க தடை
ADDED : ஜன 21, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு காரணமாக ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க, 23ம் தேதி தடை விதிக்கப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், வரும் 23ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளன.

