sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'டிவி சீரியல்' நடிகை பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல்

/

'டிவி சீரியல்' நடிகை பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல்

'டிவி சீரியல்' நடிகை பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல்

'டிவி சீரியல்' நடிகை பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல்


ADDED : செப் 08, 2025 06:15 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டிவி சீரியல்' நடிகையின் பின்னணியில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் சப்ளை செய்து வந்த முக்கிய புள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, வணிக வளாகத்தையொட்டி, பெண் ஒருவர் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு நடத்தி, கடந்தாண்டு நவம்பரில், 5 கிராம் மெத் ஆம்பெட்டமைனுடன் மீனா, 27, என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இவர், சேலம் இலங்கை முகாமை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், இவர், ஆர்யா நடிப்பில் வெளி வந்த 'டெடி' உள்ளிட்ட படங்களிலும், சுந்தரி என்ற, 'டிவி' சீரியலிலும் நடித்து இருப்பது தெரியவந்தது.

இவருக்கு பின்னணியில், போதை பொருள் கும்பலைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் செயல்படுவது தெரியவந்தது. இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன், சரவண ராஜு என்பவரும் சிக்கினார். இவர் அளித்த வாக்கு மூலம்:

சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் பயிற்சி பெற்ற நபர் ஒருவர் தான் எங்களை வழி நடத்தி வருகிறார். பத்து பேரின் கை மாறி தான் எங்களுக்கு போதைப்பொருள் வந்து சேரும்.

ஆனால், ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இருக்காது. ரூபாய் நோட்டில் உள்ள எண் எங்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த நோட்டை காண்பிக்கும் நபரிடம் பொருள் வாங்கிக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த முக்கிய நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:

மீனாவின் மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அவரின், எஸ்தர் என்ற உண்மையான பெயரில் தான் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இவரின், 'நெட் ஒர்க்' முழுவதும் ஆய்வு செய்தில், தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் சிக்குவர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us