/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைப்பொருள் கடத்தல்: ஐ.டி., ஊழியர் கைது
/
போதைப்பொருள் கடத்தல்: ஐ.டி., ஊழியர் கைது
ADDED : நவ 15, 2024 12:57 AM
விருகம்பாக்கம், விருகம்பாக்கம், பள்ளி முதல் தெருவில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரிடம் விசாரித்தனர்.
அவரை சோதனை செய்தபோது, கூரியர் வாயிலாக வந்த ஜீன்ஸ் பேன்ட் உள்ளே, தையலை பிரித்து, 3.5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கியிருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட நபர், ராயப்பேட்டையைச் சேர்ந்த அன்பு, 36, என்ற ஐ.டி., ஊழியர் என்பதும், ஓராண்டாக விருகம்பாக்கம் பள்ளி முதல் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
அன்புவை கைது செய்த போலீசார், போதை பொருள் விற்பனையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என, அவரிடம் விசாரிக்கின்றனர்.