/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது
/
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது
ADDED : மார் 02, 2026 05:24 AM
சென்னை: அண்ணா சாலையில், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போதையில் இருந்த கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
அண்ணா சாலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜன், 56. இவர், நேற்று முன்தினம் இரவு, சக போலீசாருடன் அண்ணாசாலையில் வாகன சோதனை யில் ஈடுபட்டார்.
அப்போது, அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், வாலிபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர், எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், 22, என்பதும், கல்லுாரி மாணவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையின் போது முரண்டு பிடித்த வாலிபர், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் அமர்ந்திருந்த சிறப்பு எஸ்.ஐ., ராஜன் மீது, அங்கு கிடந்த கல்லால் தாக்கினார்.
இதனால், சிறப்பு எஸ்.ஐ.,யின் கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது. சக போலீசார் அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கி தப்பியோட முயன்ற கல்லுாரி மாணவரை கைது செய்தனர்.

