/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் துாக்கிட்டு கொத்தனார் தற்கொலை
/
போதையில் துாக்கிட்டு கொத்தனார் தற்கொலை
ADDED : ஏப் 19, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்லப்பாக்கம்,
குரோம்பேட்டை, நெமிலிச்சேரியை சேர்ந்தவர் ரகு, 58; கொத்தனார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினசரி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து, தகராறு செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட ரகு, வீட்டு ஹாலின் கதவை தாழிட்டுக் கொண்டார்.
கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

