தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிபோதையில் காரிலேயே இறந்த ஓட்டுனர்

குடிபோதையில் காரிலேயே இறந்த ஓட்டுனர்

குடிபோதையில் காரிலேயே இறந்த ஓட்டுனர்


ADDED : மே 06, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூவரசம்பட்டு,

மூவசரம்பட்டு பகுதியில், காரில் மயங்கிய நிலையில் ஒருவர் இருப்பதாக, போலீசாருக்கு நேற்று இரவு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்தபோது, அந்த நபர் இறந்து கிடந்தார்.

அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தது கார்த்திக்பெருமாள், 39, என்பது தெரிந்தது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், மூவரசம்பட்டு பகுதியில் தங்கி, வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.

அளவுக்கு அதிகமான குடிபோதையில், நாக்கு வறண்டு இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us