/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி 6 மாதங்களில் முடிக்கும் வகையில் வேகம்
/
எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி 6 மாதங்களில் முடிக்கும் வகையில் வேகம்
எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி 6 மாதங்களில் முடிக்கும் வகையில் வேகம்
எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி 6 மாதங்களில் முடிக்கும் வகையில் வேகம்
ADDED : ஜூன் 23, 2025 04:00 AM

சென்னை:எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் நான்கு நடைமேடைகளில் நடைமேம்பாலம் கட்டும் பணிகள், நடைமேடை புதுப்பிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, 734.91 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி, 2023 பிப்ரவரியில் துவங்கியது.
காந்தி இர்வின் சாலை பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி முடிந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் புதிய நடைமேம்பாலம் அமைப்பது, நடைமேடைகளில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில், பெரிய ரயில் நிலையங்களில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளில், எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமானது. விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பணிகள் நடந்து வருகின்றன.
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம், பார்சல் அலுவலகம், பயணியர் ஓய்வு அறைகள், டிஜிட்டல் தகவல்கள் திரைகள், 'சிசிடிவி' கேமரா, லிப்டுகள், எஸ்கலேட்டர்கள் என பயணியருக்கான அனைத்து பணிகளும் இடம் பெறுகின்றன.
தற்போது, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளை இந்த நிதி ஆண்டிற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.