sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் பலி: 2 பேர் கைது

/

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் பலி: 2 பேர் கைது

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் பலி: 2 பேர் கைது

கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் பலி: 2 பேர் கைது


ADDED : ஆக 07, 2025 11:50 AM

Google News

ADDED : ஆக 07, 2025 11:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி: வியாசர்பாடியில், வாலிபர்களால் கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்; இருவர் கைது செய்யப்பட்டனர்.

வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகே, கடந்த 31ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரை, இருவர் சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, இருவரும் தப்பியோடினர். வியாசர்பாடி போலீசார் முதியவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வாரமாக தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலையாளிகளான வியாசர்பாடி, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 23, வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்த அலெக்ஸ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

முதியவரை கொலை செய்தது குறித்து, போலீசாரிடம் கார்த்திக் அளித்த வாக்கு மூலம்:

சம்பவத்தன்று அதிகாலை என் சகோதரியின் மகளுக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்து, என் நண்பர் அலெக்ஸுடன் சேர்ந்து முதியவரை தாக்கினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்ட முதியவர் குறித்த விபரங்களை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us