ADDED : அக் 31, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார், ராமாபுரம் அடுத்த பாலநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 65. இவர் நேற்று, செய்யூர் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் உள்ள ராமாபுரத்தில், காலை 5:00 மணியளவில் டீ குடிக்க வந்துள்ளார்.
டீ குடித்து விட்டு, சாலையில் நடந்து சென்றபோது, அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். மேல்மருவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

