ADDED : டிச 04, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வந்தவாசி நாவல்பாக்கத்தை சேர்ந்தவர் ராமானுஜலு, 80. சமீபத்தில், உறவினர்களை பார்ப்பதற்காக, அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு துபாய் வந்தார். அங்கிருந்து, எமிரேட்ஸ் விமானத்தில நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு சென்னை வந்தார்.
குடியுரிமை சோதனை களை முடித்துவிட்டு வெளியே வந்து காத்திருந்த ராமானுஜலு, உடல் நலம் பாதிக்கப்பட்டு, வருகை பகுதியில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு, ஆம்புலன்சில் அரசு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.