/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளக்கேற்றிய மூதாட்டி புடவையில் தீப்பற்றி பலி
/
விளக்கேற்றிய மூதாட்டி புடவையில் தீப்பற்றி பலி
ADDED : நவ 28, 2024 12:34 AM
விருகம்பாக்கம்,
விருகம்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்தவர் கனகா, 83. இவரது மகன் சிவகுமார் தனியார் தொலைக்காட்சி ஊழியர். இவர் குடும்பத்துடன், கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
சில ஆண்டுகளாக கனகா, அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கனகாவிற்கு தினமும் உணவு வழங்க வரும் சுரேஷ் என்பவர், நேற்று முன்தினம் இரவு சென்றபோது, மூதாட்டி எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விருகம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வீட்டில் உள்ள சுவாமி படத்திற்கு தினமும் விளக்கேற்றுவதை கனகா வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பூஜை அறையில் இருந்த சுவாமி படத்திற்கு விளக்கேற்றி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கனகாவின் புடவையில் தீ பிடித்து, உடல் முழுதும் தீ பரவிய நிலையில், சம்பவ இடத்திலேயே கனகா உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.