/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
/
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
ADDED : ஏப் 25, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வளசரவாக்கம், சவுத்திரி நகரைச் சேர்ந்தவர் விஜயாபானு, 75. அவரது மகன்கள், வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில், நான்கு நாட்களாக வீடு பூட்டியே இருந்தது. கடும் துர்நாற்றம் வந்ததை அடுத்து, பக்கத்து வீட்டினர் வளசரவாக்கம் போலீசாரிடம் நேற்று தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து, கதவை உடைத்து பார்த்தபோது, விஜயாபானு இறந்து உடல் அழுகிய நிலை கிடந்தது.
உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உடல் நலக்குறைவால் மூதாட்டி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

