/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளில் கறுப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
/
வீடுகளில் கறுப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
வீடுகளில் கறுப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
வீடுகளில் கறுப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
ADDED : மார் 22, 2026 06:43 PM

துரைப்பாக்கம்: கடந்த 35 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டிக்கும் வகையில், வரவிரக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் விதமாக, துரைப்பாக்கம் பகுதிமக்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி உள்ளனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, அண்ணா நகர் 8வது தெரு, பல்லவன் தெருவில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி, வீடுகளிலும், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கறுப்பு கொடி கட்டி உள்ளனர்.
இது குறித்து பகுதிமக்கள் கூறியதாவது:
நாங்கள் 35 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலின்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். அப்போது, பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்; பதவிக்கு வந்த பின் இரு கட்சியினரும் கண்டுகொள்வதில்லை. பல தேர்தல்களில் ஏமாற்றம் அடைந்ததால், இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

