நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் உபகரணம் திருடியவருக்கு காப்பு
மாதவரம்: மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்தவர் ரூபேஷ், 31. இவர், புதிய மற்றும் பழைய கட்டடங்களில் மின்சார உபகரணத்திற்கு தேவைப்படக்கூடிய உபகரணங்களை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி விசாரத்த மாதவரம் போலீசார், மாதவரம் பால் பண்ணை, கம்பன் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் ரூபேஷ் திருட முற்படும்போது, நேற்று கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

