ADDED : ஆக 13, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை அடுத்த தாம்பரம், முல்லை நகரில் மின் வாரியத்துக்கு, 110 கிலோ வாட் திறனில் புதுதாங்கல் துணை மின் நிலையம் உள்ளது.
இந்த வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 14ம் தேதி முற்பகல் 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.