ADDED : ஏப் 23, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
கொளத்துார் தொகுதிக்குட்பட்ட சந்தாபாய் மேல்நிலைப்பள்ளியில் உள்ள, 200வது எண்ணுள்ள ஓட்டுச்சாவடியில், மின்னணு இயந்திரம், 9:05 மணிக்கு திடீரென பழுதானது. இதனால், அங்கு 10 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது. புதிய இயந்திரம் மூலம், 9:15 மணிக்கு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது
* மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழலில் உள்ள தனியார் பள்ளியில், காலை 7:00 மணிக்கு தொடங்க வேண்டிய ஓட்டுப்பதிவு, மின்னணு இயந்திரம் பழுதால், 10 நிமிடம் தாமதமாக தொடங்கியது
* எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரின்ஸஸ் மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், 69வது பூத்தில் உள்ள இரண்டு மின்னணு இயந்திரங்களும் பழுதாகின. இதனால், காலை 8:35 மணிக்கு நிறுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு, பழுதை சரி செய்த பின், மீண்டும் 8:50 மணிக்கு தொடங்கியது.
