sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: 'இமாமி' நிறுவனம் கட்டுகிறது

/

 சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: 'இமாமி' நிறுவனம் கட்டுகிறது

 சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: 'இமாமி' நிறுவனம் கட்டுகிறது

 சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: 'இமாமி' நிறுவனம் கட்டுகிறது


ADDED : டிச 23, 2025 05:09 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, ஏகாட்டூர் பகுதியில் முதல் முறையாக, 50 மாடி குடியிருப்பு கட்டடத்தை, 'இமாமி' நிறுவனம் கட்ட உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் அதிக உயரமான கட்டடங்கள் அரிதாக இருந்தன. கடந்த, 2008ம் ஆண்டில் சி.எம்.டி.ஏ., வெளியிட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில், கட்டடங்களின் உயர கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இதையடுத்து, பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற இடங்களில், குறிப்பிட்ட சில தனியார் கட்டுமான நிறுவனங்கள், 20 முதல் 45 மாடிகள் வரையிலான கட்டடங்களை கட்டுகின்றன.

பெரம்பூர் உட்பட சில இடங் களில், 45 மாடி வரையிலான கட்டடங்கள் உள்ளன.

இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலை ஏகாட்டூரில், 'இமாமி' நிறுவனம், 'இமாமி தேஜோமயா' என்ற பெயரில், 50 மாடிகள் வரையிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

மொத்தம் 9.50 ஏக்கர் நிலத்தில், 234 வீடுகளுடன், 50 மாடி குடியிருப்பு கட்டடம்; 291 வீடுகளுடன், 28 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்பட உள்ளது. இத்துடன், 9 மாடியில் மற்றொரு குடியிருப்பு கட்டடமும் கட்டப்பட உள்ளது. கிளப் ஹவுஸ், ஜிம், பூங்கா, விளையாட்டு வளாகம் என, பல்வேறு வசதிகளுடன் இத்திட்டம் அமைய உள்ளது.

முதல் முறையாக, 50 அடி உயரத்துக் கு கட்டடம் கட்டப்பட உள்ளதால், இதற்கான ஒப்புதல் பெறும் பணிகளில், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us